இதுதான் காதலோ? (ithu than kaadhalo) Poem by Subha Poomani (kavithaigal)

இதுதான் காதலோ? (ithu than kaadhalo)

உன்னை நினைத்து...
பகல் முழுவதும் கண்
மூடி கனவு காண்கிறேன்...
இரவு முழுவதும் கண்
விழித்து கனவு காண்கிறேன்...

சிரிக்க மறக்கிறேன்
அழ நினைக்கிறேன்...
என்னையே மறக்கிறேன்
உன்னையே நினைக்கிறன்...

பசி மறந்தேன் உன்னால்
பரிதவித்தேன் உன்னால்...
பணி மறந்தேன் உன்னால்
உறைந்த பனியானேன் உன்னால்...

உறவுகளை வெறுக்கிறேன்-உன்
உறவினை பெற துடிக்கிறேன்...
உன் அழகை ரசிக்கிறேன்
உலகத்தையே மறக்கிறேன்...

என்னவோ கிறுக்குகிறேன்
எனக்குள் சிரிக்கின்றேன்...
உன்னை பார்க்க நினைக்கின்றேன்
பார்க்கும் தருணத்தில் ஒளிகிறேன்...

என்னை நினைக்க மறக்கிறேன்
உன்னை மறக்க நினைக்கிறேன்...
பெரும் அவஸ்தையாக இருக்கிறது
இந்த அவஸ்தையும் பிடிக்கிறது...

உன்னால் கவிதை எழுதுகிறேன்
உன்னோடு கற்பனையில் மிதக்கிறேன்...
இறுதியில் எழுந்தது ஒரு கேள்வி
இதே உணர்வு உனக்கும் இருக்கிறதா?

POET'S NOTES ABOUT THE POEM
முதல் காதலின் போது...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success