என்னவள்.... Poem by Subha Poomani (kavithaigal)

என்னவள்....

*காற்று கூட
விளையாட ஆசைப்படும்
என்னவளின் கருநிற கூந்தலில்...

*பிரம்மனும் குழம்பியிருப்பான்
என்ன எழுதுவதென்று
என்னவளின் நெற்றியில்...

*வானவில்லும் தயங்கி
வளைந்து செல்கிறது
என்னவளின் புருவ அமைப்பில்...

*நீரில்லாமல் வாழும்
அதிசய இருமீன்கள்
என்னவளின் கண்கள்...

*வர்ணித்து எழுத
வார்த்தைகள் இல்லை
என்னவளின் நாசி அழகை...

*பறவைகளும் ஏங்கி
கடிக்க தவமிருக்கும்
என்னவளின் கன்னத்தை...

*ரசிக்கத் தூண்டும்
அரஞ்சு சுளைகள்
என்னவளின் உதடு...

*முத்துக்களும் பாலும்
பொறாமைக்கு ஆளாகியது
என்னவளின் பளிச் பல்லில்...

*நூலிலும் மெல்லிய
அதிசய சந்தனக்கொம்பு
என்னவளின் அழகிய உடலமைப்பு...

*கடவுளும் மனிதனாக
பிறக்க ஆசைபடுகிறான்
என்னவளின் கருவாக ஜெனிக்க...

*மயிலும் மயங்கி
நிற்கும் என்னவளின்
ஒய்யார நடை அழகில்...

*குயிலும் கூனிக்குறுகி
நிற்கும் என்னவளின்
இனிய குரல் அழகில்...

*மண் தான் என்ன
தவம் செய்ததோ
என்னவள் பாதம் பட...

*நாம் காணும்
ஜான்சி ராணியாக
என்னவள் வீரத்தில்...


*பெரியார் இருந்திருந்தால்
பெருமை கொள்வார்-ஆம்
என்னவள் சிக்கனத்தின் சிகரம்...

*அறிஞர்கள் யாரிடனும்
ஒப்பிட முடியவில்லை
என்னவளின் அறிவுத்திறனை...

அன்பின் இலக்கணம்
அறிவின் ஆலயம்
சிக்கனத்தின் சிகரம்
அழகின் சொரூபம்
இதன் முகவரி என்னவள்....

POET'S NOTES ABOUT THE POEM
ஒரு பெண்ணின் குணநலன்கள் பற்றி யோசிக்கும் போது...
COMMENTS OF THE POEM
Veeraiyah Subbulakshmi 01 October 2012

nanragaththaan irukkirathu! aanaal kanneeril thaane kankal neenthukinrana.! ippakuthi mattum konjam kavanikka vendiyullathu! nanru!

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success