காற்றினில் நானொரு அம்பெய்தேன் - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள் Poem by Dr.V.K. Kanniappan

காற்றினில் நானொரு அம்பெய்தேன் - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

காற்றினில் நானொரு அம்பெய்தேன்; அந்தோவஃ
தாற்றலோடு வேகமாய்ச் சென்றதுவே; - ஏற்று
விரைந்த அதுயெந்தன் பார்வையில்செல் லாது
தரைவிழ; யெங் கென்றறி யேன்! 1

காற்றினில் நானொரு பாடலைப் பாடினேன்;
காற்றில் கலந்தந்த பாடலை – போற்றி
புரையேறாக் கண்களில் கண்டவர் சொல்வீர்!
தரைவிழ; யெங் கென்றறி யேன்! 2

மிகமிக நாட்களும் செல்லவேநான் கண்டேன்
தகவுடன் அம்புடை யாமல் – புக, தேக்கும்;
அங்கந்த பாடலு(ம்) ஆதியந்த மாய்நண்பன்
தங்கமான நெஞ்சம தில்! 3

This is a translation of the poem The Arrow And The Song by Henry Wadsworth Longfellow
Sunday, September 6, 2015
Topic(s) of this poem: songs of life
COMMENTS OF THE POEM
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success