அப்பாவின் அன்பு
தன் வறுமை தெரிந்தும்
தன் முதல் குழந்தையின்
தனிமை தெரியாமல் இருக்க
என்னொரு குழந்தை!
...
சம்பளமோ சில ஆயிரம்
அதிலொரு பாதி வீட்டு வாடகை
அன்றாட உணவுக்கு மறு இருபாதி
பிள்ளை வளர்க்க பத்தவில்லை மீதிபாதி
...
படிக்கும் வயதில் கற்றுகொண்டது
பட்டினியுடன் வறுமையையும் மட்டும்
பாதியில் விட்டது படிப்பைமட்டுமல்ல
என் பசியையும் தான்...
...
ஆணின் அன்பு(Aanin Anbu) ...
ஆனந்த கண்ணீரின் போது
அருகில் இருந்த நீ...
...
தொழிற்நுட்ப மாற்றம்
என்னவள் முகத்திலும்
தொழிற்நுட்ப மாற்றம்-ஆம்
...
காதல் முடிவு...
நம்மிருவர் பெற்றோர்
கைகளிலும் அரிசி...
...
உன்னை நினைத்து...
பகல் முழுவதும் கண்
மூடி கனவு காண்கிறேன்...
இரவு முழுவதும் கண்
...
மழையே
நீ என்னை நனைக்கையில்
என்னவனின் இதயத்தில் தான்
...
பதினெட்டு வயதில்
பெண் பார்க்க வந்தார்கள்...
பதார்த்தங்களை ருசித்துவிட்டு
யதார்த்தமாய் கேட்டார்கள் பொன்னை...
...
இடுப்புவரை கூந்தலிருந்தால்
எடுக்கநாட்டன் பெண்ணாம்...
கழுத்துவரை கத்தைமுடியிருந்தால்
கலாச்சரமிக்க பெண்ணாம்...
...
நான் மழையை ரசிக்காமல் உன்னை
ரசிப்பதால் என்னவோ மழை
உன்னை நனைக்கிறது...
நனைந்து நிற்கும் உன் அழகை
...
பெற்றோரின் பேச்சுக்கு
மதித்து நடந்தால் நண்பர்கள்
மதிப்பதில்லையாம்...
நண்பர்களின் அன்புக்கு
...
This is subha poomani from keelakkottai(Tuticorin Dist, Tamilnadu) . i have registered everything is my own poem. Please my friends comment about my poem...)
Appavin Anbu
அப்பாவின் அன்பு
தன் வறுமை தெரிந்தும்
தன் முதல் குழந்தையின்
தனிமை தெரியாமல் இருக்க
என்னொரு குழந்தை!
தன் இயலாமை தெரிந்தும்
தன் குழந்தைகளின் ஆசைக்காக
தனியார் பள்ளி வாகனத்தில்
தன் குழந்தைகளும்!
தன் கையிருப்பு தெரிந்தும்
தன் மகன்களோ தனியார் கல்லூரிகளில்
தன் சொத்து விவரமோ
பத்திரமாய் வங்கிகளில்!
தன் மகனின் திருமணத்திற்காய்
வங்கிகளிருந்த பத்திரமெல்லாம்
தன் மகனின் திருமண பத்திரிகைகளாய்
அடுத்தவர் கையின் சொத்துகளாய்!
தன் மகனும் மருமகளும் சந்தோஷத்தில்
குளிர்சாதன அறைகளில்
தன் மகனின் சந்தோசத்திற்காய்
தானும் தன் மனைவியும் முதியோர் இல்லத்தில்...