Nothing Is There To Write Poem by Dinesh Sundram

Nothing Is There To Write

எழுதுவதற்கு எதுவுமில்லை
என்ற ஏக்கத்தோடு
எழுத நினைத்தேன் ஓரிரு
எழுத்துக்களை,

என்ன எழுதுவதென்று தெரியாமல்
எழுத ஆரம்பித்தேன் சில
எழுத்துக்களை,

எல்லா கவிகளும் சொல்லாததா
என் எழுத்துக்கள் சொல்லப்போகிறது
என்ற குழப்பத்தோடு
எழுத தொடங்கினேன் அடுத்த சில
எழுத்துக்களை, ஒன்றும் தோன்றாத கற்பனைகளால்

எனினும்,
எழுது என்றது என் பேனா
என் விரல் மீது கொண்ட காதலால்
என் விரல் மீது கொண்ட ஊடலால்
என் விரலும் இறுக்கமாய் அணைத்தது அவளை
என் கவிகள் பிரசுவிக்க..

எழுதுவதற்கு எதுவுமில்லை,
என்னிடம்..

Tuesday, January 13, 2015
Topic(s) of this poem: write
POET'S NOTES ABOUT THE POEM
Nothing is there to write..but writing, i have liked to write.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success