கனவு Poem by World Poems Otteri Poet

கனவு

+++++

வாழ்க்கை இங்கு
பலருக்கு கனவாகவே இருக்கிறது கனவு காணும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது
அதற்காக
கனவு வாழ்க்கையாகி விடாது வாழ்க்கை அங்கம் தான்
கனவு என்பது பலருக்கு வாழ்ந்து முடித்த பின்னர் தான் புரிந்து விடுகிறது
வாழும் போது கனவு வருகிறது பின் செல்கிறது என்ன செய்வது? வாழ்க்கையை கனவாக இருந்துவிடக் கூடாதா? என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது
காரணம்
வாழ்க்கை என்பது பலருக்கு போராட்டமாகவே இருப்பதால்
கனவு என்பது கருகிப்போன நிலவாக இருக்கிறது
வெறும் காகித பூக்களாக இருக்கிறது என்ன செய்வது?
கனவு மட்டுமல்ல வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ள இன்னமும் அனுபவம் தேவைப்படுகிறது....

+ஓட்டேரி செல்வ குமார்

கனவு
Thursday, December 11, 2025
Topic(s) of this poem: dream,lessons of life,tamil
POET'S NOTES ABOUT THE POEM
Dream's
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success