அது பூஜ்யம் தான் Poem by World Poems Otteri Poet

அது பூஜ்யம் தான்

+++++--------++++++

நேற்றைய கேள்வி
இன்று பதிலாகிறது
இன்றைய பதில்
நாளைய கேள்வியாகிறது
கேள்வி பதிலுக்குள் தான்
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது
எந்த கேள்வியும் யாரையும்
திருப்தி படுத்தவில்லை..
எந்த பதிலும் யாரையும்
திருப்தி படுத்தவில்லை...
கேள்விகள் தான்
மீண்டும் மீண்டும்
வந்து கொண்டிருக்கும்...
அப்படி என்றால் வாழ்க்கை கேள்வியா?
அல்லது பதிலா! !
என்று கேட்டால்
கேள்வியும் அல்ல
பதிலும் அல்ல
ஏதோ இருப்பது போல் தோன்றும் இல்லாதது போல் இருக்கும்
புஜியம் தான் வாழ்க்கையா? என்கிற
கேள்வி மட்டும் பதிலாகவே இருக்கிறது

+ ஓட்டேரி செல்வ குமார்



POET'S NOTES ABOUT THE POEM
Life style
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success