ஆடிக் காற்றில் மிதந்து வரும் முழுநிலவு
பாடிக் களிக்கும்படி குளிர் ஒளி சிந்த - உலகில்
ஓடிக் களைத்த மக்கள் கால்கள் - அவரை
நாடிவரும் நாள் குரு பூர்ணிமா! 🌝
குருவருள் வேண்டி மனம் மிக ஏங்கி
ஒருநாளேனும் குரு மடி மீது விழி மூடி
சுகம் காண அலையென வரும் மக்கள் - அவர்
முகம் கண்டு நிலா கண்ட அல்லிகளாவர்! 🌝
வார்த்தை ஏதும் பேசாத அக்குளிர் நிலா
வானிலிருந்து ஒளியூட்டி இதழ்களை விரித்திட
மௌனமாய் வந்து நம்குருவோ மன
மொக்குகளை அருளூட்டி பூக்களாக்கிடுவார்! 🌝
வாருங்கள் மதி பொழியும் சோம பானம் பருகிடவே!
தாருங்கள் அகந்தையை காணிக்கையாக குருவடிக்கே!
தளருங்கள் தாய்மடி சுகம் எனக் கிடக்கும் சிசுவாகியே!
மலருங்கள் மணம் வீசி ஆனந்தக் களியாடிடவே! 🌝
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem