சுழற்சி Poem by Saravanan Sivasubramanian

சுழற்சி

ஓடிக்கொண்டே இருக்கிறேன்
ஓர் நாள் என் வாழ்வில் வெற்றி வாராதா
என்ற ஏக்கத்தில்
வாடிக்கொண்டே இருக்கிறேன்
கால் வலியில் நடந்துகொண்டே
தேடிக்கொண்டே இருக்கிறேன்
என் கதையை கேட்போரை
நாடிக்கொண்டே இருக்கிறேன்
நல்லவர்களை நியாயம் தெரிந்தவர்களை
பாடிக்கொண்டே இருக்கிறேன்
பாட்டு முடியும் வரை...

POET'S NOTES ABOUT THE POEM
My life in a few lines
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success