விடை தேடும் உவமேயம் Poem by Saravanan Sivasubramanian

விடை தேடும் உவமேயம்

ஒவ்வொரு பத்து வருடத்தையும்

வாழ்க்கை கடக்கும் தருணங்களை

மலை பயணத்தின்

கொண்டை ஊசி வளைவுகளின்

திருப்பங்களாக

உணரும் வேளையில்...

இருளில் இருந்து

தீடீரென்று வெளிப்படும்

வழிபறிகாரனைப போல்

எழும் ஒரு கேள்வி:

வாழ்க்கை என்பது

மலை மீது ஏறுவதா?

மலையில் இருந்து இறங்குவதா?

Wednesday, June 14, 2017
Topic(s) of this poem: lifespan
POET'S NOTES ABOUT THE POEM
Questions about the life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success