மதிப்பு Poem by Subha Poomani (kavithaigal)

மதிப்பு

பெற்றோரின் பேச்சுக்கு
மதித்து நடந்தால் நண்பர்கள்
மதிப்பதில்லையாம்...

நண்பர்களின் அன்புக்கு
அடிமையானால் ஆசியர்கள்
மதிப்பதில்லையாம்...

ஆசிரியரின் அறிவுரைக்கு
அடிமையானால் மாணவர்கள்
மதிப்பதில்லையாம்...

கணவனின் கட்டளைக்கு
கட்டுபட்டால் காண்பவர்கள்
மதிப்பதில்லையாம்...

மனைவியின் கருத்துக்கு
மதிப்பு கொடுத்தால் மற்றவர்கள்
மதிப்பதில்லையாம்...

குழந்தைகளின் விருப்பத்திற்கு
மதிப்பு கொடுத்தால் அக்கம்பக்கத்தினர்
மதிப்பதில்லையாம்...

ஒருவரை ஒருவர் மதித்து
நடந்தால் மதிப்பவரை
யாரும் மதிப்பதில்லையோ? ? ?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success