Easter Sunday Poem by Jeyagajany Jeyanathan

Easter Sunday

பார்போற்றும் விண்ணுலகில் இருந்து,
வஞ்சனையால் ஆளப்படும் மண்ணுலகிற்கு வந்து,
எதிர்பார்பற்ற பெரும் அன்பு வெள்ளத்தால்,
நம்மை தூய்மை செய்தாய்.

எண்ணற்ற பாவத்தை செய்தாலும்,
தமக்கு எதிராக திட்டம் தீட்டினாலும்,
என்றும் புன்சிரிப்புடனும்
திறந்த கையுடனும்,
நம்மை நேசத்துடன் அரவணைத்தாய்.

தம் விழிகளில் இருந்து எம்மக்காக பெருக்கெடுக்கும்
கண்ணீர் ஆழியை பொறுப்படுத்தாது போதிலும்,
முள் கிரீடம் சூட்டி,
சிலுவையில் அறைந்து
தம்மை துன்பிரிதையா போதிலும்,
இவ் உலகில் வாழும் எந்த ஜீவனுக்கும் ஒரு சிறு துன்பம் நேர்கையில்,
ஓடுடி வரும் தாய் உள்ளம் படைத்த இறைமகனே...

இந்த ஞாயிறு அன்று
நம் மனதில் என்றும் நீங்காது
உயிர்த்தெழ மன்றாடி வேண்டுகிறோம்!

- ஜெயகஜனி ஜெயநாதன்

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success